“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”